என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நண்பர்கள் பலி"
வேலாயுதம்பாளையம்:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த செல்லதுரை மகன் ராமச்சந்திரன் ( வயது 27). டிப்ளமோ படித்து விட்டு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இதையடுத்து கல்லூரி நண்பர் கரூர் மாவட்டம், வீரராக்கியத்தை சேர்ந்த சின்னுசாமி மகன் மணிகண்டன் (28) என்பவரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் இருவரும் சோலார் அமைப்பது தொடர்பாக ஈரோடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராமச்சந்திரன் பைக்கை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்திருந்தார்.
இருவரும் கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை புன்னம்சத்திரம் அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் செல்லும் போது ஈரோட்டிலிருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் இறந்து விட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்